May 24, 2026
Thisaigal NewsYouTube
30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு போதுமான சேமிப்பு இல்லை
தற்போதைய செய்திகள்

30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு போதுமான சேமிப்பு இல்லை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 27-

முப்பது வயதுக்கும் கீழ்ப்பட்ட 90 விழுக்காடு EPF சந்தாதாரர்கள், தங்களின் அந்திம காலத்தில் தேவைப்படக்கூடிய அளவுக்கு போதுமான சேமிப்பைக் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் அனுமதிக்கப்பட்ட நிதி மீட்பு நடவடிக்கைகள் இ.பி.எஃப். சந்தாதாரர்களின் நிதி சேமிப்பு குறைந்ததற்கு பொதுவான காரணமாக விளங்குவதாக கஸானா ஆய்வுக் கழகம் கூறுகிறது.

பொதுச் சேவைத் துறை மற்றும் அதிகாரப்பூர்வமற்ற துறைகளை தவிர்த்து நாட்டிலுள்ள மனித வளத்தில் 60 விழுக்காட்டினரை இ.பி.எஃப். வாரியம் பிரதிநிதிப்பதாக அக்கழகத்தை மேற்கோள் காட்டி உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐம்பத்தைந்து வயதை அடையும் போது 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி சேமிப்பைக் கொண்டிருப்பதற்கு ஏதுவாக இ.பி.எஃப். சந்தாதாரர்கள் தங்களின் 30 ஆவது வயதில் 35,000 வெள்ளியை சேமிப்பாக கொண்டிருக்க வேண்டும் என்று அந்த வாரியம் மதிப்பிடுகிறது.

முப்பது வயதுக்கும் குறைவான முதல் பத்து விழுக்காட்டினர் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 35,000 வெள்ளிக்கும் அதிகமான சேமிப்பைக் கொண்டுள்ளனர் என்று 2019 முதல் 2022 வரை ஊழியர் சேம நிதி வாரியமான EPF சந்தா தரவுகள் காட்டுகின்றன

Related News