Apr 4, 2026
Thisaigal NewsYouTube
முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
தற்போதைய செய்திகள்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

Share:

தற்போதைய சூழலில் அரசியலை விட நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், 16-வது பொதுத்தேர்தல் குறித்து இப்போதைக்கு சிந்திக்க வேண்டாம் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று ஈப்போவில் புலாத்தான் சுல்தான் அஸ்லான் ஷா – வில் நடைபெற்ற 'மடானி ரக்யாட்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "அடுத்த ஒரு மாதத்திலோ அல்லது இரண்டு மாதங்களிலோ தேர்தல் நடத்தப்போவதில்லை, எனவே தயவுசெய்து பொறுமையாக இருங்கள். இப்போது வேலை செய்ய வேண்டிய நேரம். அரசியலை ஓரங்கட்டிவிட்டு, நாட்டைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்," என்றார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் உலகப் பொருளாதாரம், எண்ணெய் விலை மற்றும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இக்கட்டான இச்சூழ்நிலையில் தேசிய நிலைத்தன்மையே முக்கியம் என வலியுறுத்தினார்.

மேலும், பொது நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கில், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பேராக் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாரானி முகமது மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு