வேனின் பின்புறத்தில் மோதி இருக்கலாம் என்று நம்பப்படும் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், விபத்தின் அதிர்வினால் சாலை நடுவே தூக்கி எறியப்பட்டதில் எதிரே வந்த லோரியினால் மோதப்பட்டு, சக்கரத்தில் அரைப்பட்டு மாண்டார். இச்சம்பவம் நேற்று மதியம் 12.44 மணியளவில் கோம்பாக், லெபுஹ் உத்தாமா ஶ்ரீ கோம்பாக் சாலையில் நிகழ்ந்தது. ஹோன்டா வேவ் ரக மோட்டார் சைக்கிளில் ஸ்ரீ கேம்பாக்கிலிந்து பிங்கிரான் பத்துகேவ்ஸ்ஸை நோக்கி 48 வயதுடைய அந்த ஆடவர் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் நோர் அரிஃபின் முஹமாட் நாசிர் தெரிவித்தார். இச்சம்பவத்தில் அந்த ஆடவரை மோதித் தள்ளியதாக நம்பப்படும் லோரி, அவ்விடத்தில் காணப்படவில்லை. அந்த லோரியையும், அதன் ஓட்டுநரையும் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நோர் அரிஃபின் குறிப்பிட்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


