ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ள மூவார் எம்.பி.யும், மூடா கட்சியின் தலைவருமானஷெட் செடிக் ஷெட் அப்துல் ரஹ்மான், தமது மூவார் தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, இடைத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
ஷெட் செடிக் சரியான ஆண்மகனாக இருந்தால், பக்காத்தான் ஹராப்பான் வாயிலாக வெற்றிப் பெற்ற மூவார் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எட்டிப்பிடிப்பதற்கு தமது ஒரு எம்.பி. ஆதரவை வழங்கி தற்போது கொக்கரித்துக்கொண்டு இருக்கும் ஷெட் செடிக், தமக்கு அரசாங்கப் பதவி வேண்டுமானால் அதனை முறையாக கேட்டு பெற வேண்டுமே தவிர இன்று சிறப்பு நாடாளுமன்றம் கூடியிருக்கும் வேளையில் ஆதரவை மீட்டுக்கொண்டுள்ளதாக மிரட்டக் கூடாது என்று புவாட் சர்காஷி நினைவுறுத்தியுள்ளார்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து


