ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ள மூவார் எம்.பி.யும், மூடா கட்சியின் தலைவருமானஷெட் செடிக் ஷெட் அப்துல் ரஹ்மான், தமது மூவார் தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, இடைத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
ஷெட் செடிக் சரியான ஆண்மகனாக இருந்தால், பக்காத்தான் ஹராப்பான் வாயிலாக வெற்றிப் பெற்ற மூவார் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எட்டிப்பிடிப்பதற்கு தமது ஒரு எம்.பி. ஆதரவை வழங்கி தற்போது கொக்கரித்துக்கொண்டு இருக்கும் ஷெட் செடிக், தமக்கு அரசாங்கப் பதவி வேண்டுமானால் அதனை முறையாக கேட்டு பெற வேண்டுமே தவிர இன்று சிறப்பு நாடாளுமன்றம் கூடியிருக்கும் வேளையில் ஆதரவை மீட்டுக்கொண்டுள்ளதாக மிரட்டக் கூடாது என்று புவாட் சர்காஷி நினைவுறுத்தியுள்ளார்.

Related News

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி


