Mar 14, 2026
Thisaigal NewsYouTube
இரு கார்கள் நேருக்கு நேர் மோதல் - பெண் பரிதாப பலி, 5 பேர் படுகாயம்!
தற்போதைய செய்திகள்

இரு கார்கள் நேருக்கு நேர் மோதல் - பெண் பரிதாப பலி, 5 பேர் படுகாயம்!

Share:

லாஹாட் டத்து, டிசம்பர்.28-

லாஹாட் டத்து, ஜாலான் சீலாம் பகுதியில் இன்று மதியம் இரண்டு வாகனங்கள் பயங்கரமான வேகத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த லாஹாட் டத்து தீயணைப்பு வீரர்கள், நசுங்கிய காருக்குள் சிக்கிக் கொண்டவர்களை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக அதன் தலைவர் சும்சோவா ரஷிட் தெரிவித்தார்.

பலத்த காயமடைந்த ஐந்து பேர் உயிருக்குப் போராடி வரும் நிலையில், விபத்துக்குள்ளான வாகனங்கள் உருக்குலைந்து கிடந்த காட்சி அந்தப் பகுதி வழியே சென்ற பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து காவற்படை தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், தலைமறைவாக உள்ள மற்றொரு கார் ஓட்டுநரின் தகவல்களைச் சேகரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Related News