Jul 4, 2026
Thisaigal NewsYouTube
நீரில் மூழ்கிய சிறுவன், சிகிச்சை பயன் அளிக்கவில்லை
தற்போதைய செய்திகள்

நீரில் மூழ்கிய சிறுவன், சிகிச்சை பயன் அளிக்கவில்லை

Share:

மலாக்கா, ஜூலை.22-

நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 7 வயது சிறுவன், சிகிச்சை பயன் அளிக்காமல் உயிரிழந்தான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் மலாக்கா, கோத்தா லக்சாமானா, தாமான் கோத்தா ஷாபண்டாரில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ஜோகூர், ரிந்திங் 3 தேசியத் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவன், மூச்சுத் திணறலுக்கு ஆளாகி கடந்த இரண்டு தினங்களாக மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தான்.

எனினும் சிகிச்சைப் பயன் அளிக்காமல் அவன் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங்வே ஹீ செம் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது