கிளந்தானின் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை பார்வையிடுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மதியம் கோத்தா பாரு வந்தடைந்தார்.
பிரதமரின் சிறப்பு விமானம், மதியம் 12.08 மணியளவில் கோத்தா பாரு, பெங்காலான் செபா, சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தை வந்தடைந்தது.
பிரதமரை கிளந்தான் மந்திரி பெசார் நசாருடின் டாவுட், இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் பேரிடர் நிர்வாக மன்ற தலைமை இயக்குநர் கைருல் ஷாஹ்ரில் இட்ருஸ் – சுடன் இணைந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளையும், பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திப்பதற்கு பிரதமர் சென்றார்.








