Apr 7, 2026
Thisaigal NewsYouTube
பவுலிங் மையத்தில் பபூட்டிய அறையில் ஊழியர் சடலமாகக் காணப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பவுலிங் மையத்தில் பபூட்டிய அறையில் ஊழியர் சடலமாகக் காணப்பட்டார்

Share:

பேராக் மாநிலம் தஞ்சோங் மாலிம் பகுதியில் உள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகமான UPSI-இல், பவுலிங் மையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் மர்மமான நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை அதிகாலை 1.57 மணியளவில் தகவல் கிடைத்ததாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் பேராக் மாநில கிளை துணை இயக்குநர் சபரோட்சி நோர் அகமது தெரிவித்துள்ளார்.

தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், 10 நிமிடங்களில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 53 வயதான முகமது ராட்ஸி அரிஃபின் என்ற அந்த ஆண் ஊழியர், பந்துவீச்சு மையத்தின் சுத்தம் செய்யும் உபகரணங்கள் வைக்கப்படும் அறைக்குள் சுயநினைவின்றி காணப்பட்டார்.

இதனையடுத்து, அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மீட்பு நடவடிக்கையானது இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிறைவடைந்ததாகவும், இச்சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எதிரொலி/ தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை மீண்டும் அமைக்கும் முயற்சிகள் தீவிரம்

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எதிரொலி/ தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை மீண்டும் அமைக்கும் முயற்சிகள் தீவிரம்

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

மோசடிக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - ஆர் சஞ்சீவன் வலியுறுத்து

மோசடிக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - ஆர் சஞ்சீவன் வலியுறுத்து

ஜோகூரில் பெர்ஹிலிடிான் நடத்திய அதிரடிச் சோதனை: 36.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வனவிலக்கு உடல் பாகங்கள் பறிமுதல்

ஜோகூரில் பெர்ஹிலிடிான் நடத்திய அதிரடிச் சோதனை: 36.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வனவிலக்கு உடல் பாகங்கள் பறிமுதல்

சொத்து விவரங்களை மறைத்த வழக்கு: டாயிம் மகள் அசனிடா விசாரணை கோரினார்

சொத்து விவரங்களை மறைத்த வழக்கு: டாயிம் மகள் அசனிடா விசாரணை கோரினார்

"முழுமையான வெளிப்படையான விசாரணை வேண்டும்" - நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் கோரிக்கை

"முழுமையான வெளிப்படையான விசாரணை வேண்டும்" - நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் கோரிக்கை