குறைந்தப்பட்ச சம்பளம் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களுக்கும் அடுத்த மாதத்திற்குள் தீர்வு காண அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே குறைந்தப் பட்ச சம்பளத் திட்டத்தின் அமலாக்கம் பல சிரமங்களுக்கு இடையே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பொதுச் சேவைத்துறை ஊழியர்களின் நடப்பு சம்பளம் திருப்தியளிக்காத நிலையில் இருப்பதை ஒப்புக்கொண்ட அன்வார், சாமானிய மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு சில தரப்பினர் தங்களின் சுய நலத்திற்கு நாட்டின் வளங்களைச் சுரண்டிவிட்டதாக சுட்டிக்காட்டினார்.
தற்போது ஒற்றுமை அரசாங்கம் நாட்டை நிர்வகிக்கும் போது வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதற்கான தாக்கத்தை உணர முடிவதாக குறிப்பிட்டார்.

Related News

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது


