கோலாலம்பூர், ஜூலை 05-
மடானி அரசாங்கத்தின் கீழ் அதிகமான இந்திய தொழில்முனைவர்கள் தொடர்ந்து உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தொழிமுனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ R. ரமணம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தேசிய நிதியகமான தெக்கூன், இந்திய தொழில்முனைவர்களுக்கு உதவும் நோக்கில் SPUMI ( ஸ்பூமி ) எனப்படும் இந்திய சமுதாய தொழில்முனைவர்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதி உதவியை வழங்கி வருவதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
கடந்த மே 31 ஆம் தேதி வரை தகுதி பெற்ற 29 ஆயிரத்து 136 இந்திய தொழில்முனைவர்களுக்கு மொத்தம் 48 கோடியே 80 லட்சம் வெள்ளி மதிப்புள்ள உதவித் திட்டத்தை ஸ்பூமி பதிவு செய்துள்ளதாக டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.
இந்த எண்ணிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த மே 31 ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் உள்ள 835 இந்திய தொழில்முனைவர்களுக்கு ஒரு கோடியே 79 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.
தொழிமுனைவர்கள் மற்றும் கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சராக தாம் தலைமையேற்றப் பின்னர் இநத் நிதி வழங்கப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.
தவிர இந்திய மகளிர்களை வளப்படுத்தும் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கான நிதி உதவித் திட்டத்தையும் தாம் மேம்படுத்தி வருவதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.








