Mar 31, 2026
Thisaigal NewsYouTube
தனியார் பல் கிளினிக்குகளின் சிகிச்சைக் கட்டணம் முறைப்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

தனியார் பல் கிளினிக்குகளின் சிகிச்சைக் கட்டணம் முறைப்படுத்தப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.26-

தனியார் பல் கிளினிக்குகளில் சிகிச்சைகளுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்கள் குறித்து மக்கள் மத்தியில் கவலைகள் எழுந்து வருகின்றன. தனியார் பல் கிளினிக்குகளால் விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்களை சுகாதார அமைச்சும், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சும் / முறைப்படுத்த வேண்டும் என்று மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ T. முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்விவகாரம் தம்முடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட டத்தோ முருகையா, பல் சிகிச்சைகளுக்கானக் கட்டணங்கள் முறைப்படுத்தப்படாத வரை அவை பொது மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் என்றார்.

தனியார் பல் கிளினிக்கிற்கு ஒரு முறை சென்றால், 500 முதல் 2,500 ரிங்கிட் வரை கட்டணங்கள் விதிக்கப்படுவது குறித்து ஏராளமான புகார்களைத் தாம் பெற்றுள்ளதாகவும், இது உண்மையிலேயே கவலையை அளிக்கிறது என்றும் டத்தோ முருகையா குறிப்பிட்டார்.

மக்கள் ஏற்கனவே பொருளாதார அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் போராடி வரும் இவ்வேளையில் இத்தகைய அதிகப்படியான கட்டணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்நிலையில், சுகாதார அமைச்சும், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சும் தனியார் பல் கிளினிக்குகளில் பல் சிகிச்சைகளுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்கள் முறைப்படுத்தவும், தரப்படுத்தவும் ஒரு வழிமுறையை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார்.

மக்களின் சுகாதாரத் தேவைகளை யாரும், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை உறுதிச் செய்ய இந்நடவடிக்கை அவசியமாகும் என்று டத்தோ முருகையா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்:  தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்: தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்