கோலாலம்பூர் மாநகரில் மையப்பகுதியில் நில அடையாளமாக வீற்றிருக்கும் திஆரெக்ஸ் எனப்படும் துன் ராசாக் எக்ஸ்செஞ் நிலத்தடி சுரங்கப்பாதை, வரும் நவம்பர் 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ செரி அலெக்ஸென்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.
சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட அந்த நிலத்தடி சுரங்கப்பாதை, கோலாலம்பூர் மாநகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை சுமார் 30 விழுக்காடு குறைக்க வல்லதாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
வாகனமோட்டிகள் கோலாலம்பூர் மாநகருக்குள் நுழையாமலேயே தங்களின் இலக்கை வெகுவிரைவில் சென்றடைவதற்கு துன் ராசாக் எக்ஸ்செஞ் நிலத்தடி சுரங்கப்பாதை பெரும் துணை புரியும் என்று அலெக்ஸென்டர் நந்தா லிங்கி நம்பிக்கை தெரிவித்தார்.
துன் ராசாக் எக்ஸ்செஞ் நிலத்தடி சுரங்கப்பாதை, ஜாலான் துன் ராசாக் மற்றும் ஸ்மார்ட் சுரங்கப்பாதை ஆகியவற்றுடன் நேரடிப் பாதையை கொண்டுள்ளது. ஒரு வளைவான பாதையை கடப்பது மூலம் மிக எளிதில் திஆரெக்ஸ் மேம்பாட்டுப் பகுதியை சென்றடையவும், அங்கிருந்து வெளியேறவும் மு டியும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.







