ஒரே பாலினத்தவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் டிஏபியின் அந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தற்போது கட்சியில் இல்லை என்று அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி சொங் எங் தெரிவித்துள்ளார். லெஸ்பியன், கேய்,திருநங்கைகள் ஆகியோரை ஓர் பாலினத்தவராக டிஏபி அங்கீகரித்தது கிடையாது என்பதையும் பினாங்கு மாநில மகளிர் , குடும்ப மற்றும் பாலினத்தவர் மேம்பாடுக்குழுத் தலைவரான சொங் எங் குறிப்பிட்டார்.
ஒரே பாலினத்தவரை திருமணம் செய்து கொண்ட டிஏபியை சேர்ந்த அந்த முன்னாள் பெண் சட்டமன்ற உறுப்பினர், கட்சியிலிருந்து வெளியேறியப் பின்னர் தற்போது அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார். அந்த முன்னாள் பெண் சட்டமன்ற உறுப்பினரின் செயலை மையமாக கொண்டு அடிப்படையற்ற குற்றச்சாட்டை டிஏபிக்கு எதிராக பகர்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு சொங் எங் கேட்டுக்கொண்டார்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


