May 14, 2026
Thisaigal NewsYouTube
ரபிசியிடமிருந்து ஆவணங்கள், காணொளிகளைப் பெற்றுக் கொண்டதாக எஸ்பிஆர்எம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ரபிசியிடமிருந்து ஆவணங்கள், காணொளிகளைப் பெற்றுக் கொண்டதாக எஸ்பிஆர்எம் அறிவிப்பு

Share:

முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி வழங்கிய பல ஆவணங்கள் மற்றும் காணொளி பதிவுகளைப் பெற்றுக்கொண்டதாக எஸ்பிஆர்எம் இன்று அறிவித்துள்ளது.

இன்று காலை சுமார் 10 மணியளவில், ரபிசி ரம்லி ஐந்து வழக்கறிஞர்களுடன், ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்திற்கு வருகை புரிந்ததாக, எஸ்பிஆர்எம்-இன் மூத்த விசாரணை இயக்குநர் முகமது ஹாஃபாஸ் நாசர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆர்ம் லிமிடெட் UK உடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அச்சிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் யுஎஸ்பி சாதனத்தில் சேமிக்கப்பட்ட காணொளி பதிவுகளை ரபிசி ரம்லி ஒப்படைத்ததாகவும் முகமது ஹாஃபாஸ் நாசர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்ம் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்துடன் தொடர்புடைய 1.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு விவகாரம் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக, ரபிசி தாமாகவே முன்வந்து, இந்த ஆதாரங்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News