சுமார் ஆறு லட்சம் வெள்ளி லஞ்சம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விசாரணைக்கு உதவும் வகையில் அரசு சார்பு நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் முறை அதிகாரி உட்பட மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.
39 க்கும் 54 க்கும் இடைப்பட்ட வயதுடை அந்த மூன்று ஆடவர்களும், நேற்று இரவு 8 மணியளவில் எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்கு சாட்சியம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு கட்டடத்தின் இயந்திரம் மற்றும் மின்சார அமைப்புகளை மேம்படுத்தும் குத்தகையில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனத்திற்கு தென்டர் பெற உதவியதற்காக, அந்த அதிகாரி 6 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக நம்பப்படுகிறது.
இது தொடர்பாக பிடிபட்ட நபர்கள் 2009 ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அதன் தகவல்கள் கூறுகின்றன.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


