Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தமிழ் மொழி விழாவில் கடவுள் வாழ்த்து, தமிழ் சாழ்த்து பாடலுக்குத் தடை விதிப்பதா ? - பினாங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் !
தற்போதைய செய்திகள்

தமிழ் மொழி விழாவில் கடவுள் வாழ்த்து, தமிழ் சாழ்த்து பாடலுக்குத் தடை விதிப்பதா ? - பினாங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் !

Share:

நேற்று பினாங்கு கெப்பாளா பாத்தாசில் உள்ள ஒரு விடுதியில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடந்த 2023 தேசிய நிலையிலான வளர்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்து பாடல்களுக்குத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து பொனாங்கு மாநிலஆட்சிக் குழு உறுப்பினர் சுன்டரஜு சொமூ வும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிரிஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்உம் உடனடியாகத் தலையிட வேண்டும் என இன்று இருவரு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

எந்த நிகழ்சியைத் தொடங்கும் முன்னர், கடவுள் வாழ்த்தும் தமிழ் வாழ்த்தும் பாடப்படுவது தமிழர்கள் காலம் காலமாக தங்களின் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பல்லின மக்களைக் கொண்டுள்ள மலேசியத் திருநாட்டில் அனைத்து இனங்களும் தங்களின் சமயம், மொழி, பண்பாட்டைக் கடைபிடிக்க மலேசிய அரசியல் அமைப்புச் சட்டம் வழி வகை செய்கிறது.

அவ்விரு பாடல்களுக்கும் அமைச்சின் அதிகாரப்பூர்வ - மொழி சார்ந்த நிகழ்ச்சியில் தடை விதிப்பது மக்களிடையே வீண் பிரச்சனையைக் கிளப்புவது போல் உள்ளது என பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் சிஅப்பு செயற்குழுவின் தலைவர் சுந்தராஜூவும் துணைத் தலைவர் குமரன் கிருஷ்ணனும் தெரிவித்துள்ளனர்.

வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பிரதமரும் கல்வி அமைச்சரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், உலகப் பொது மறை தந்த திருவள்ளுவரின் உருவம் கொண்ட பதாகைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததையும் அவ்விருவரும் குறிப்பிட்டனர்.

இந்தத் தடைக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன ? கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்படும் தேசிய நிலையிலான மொழி நிகழ்ச்சியில் இவ்வாறானத் தடைகள் விதிக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்விவகாரம் குறித்து பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு செயற்குழு அம்மாநில கல்வித் திணைக்களத்தைத் தொடர்பு கொண்டிருப்பதாகவும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!