Mar 11, 2026
Thisaigal NewsYouTube
புறப்பாட நடவடிக்கைகளை ஒத்திவைப்பீர்
தற்போதைய செய்திகள்

புறப்பாட நடவடிக்கைகளை ஒத்திவைப்பீர்

Share:

நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மத்தியில், வெப்ப நிலை தொடர்ந்து அதிகரிக்குமானால், பள்ளிகளில் புறப்பாட நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
வெப்ப நிலை மற்றும் புகை மூட்டத்திலிருந்து மாணவர்களை பாதுகாத்துகொள்வதற்கு, இந்த நடவடிக்கை அவசியமாகும்.

பள்ளி வீற்றிருக்கும் பகுதியில், காற்றின் தரம் மோசமடைந்து, தூய்மைக்கேட்டின் குறியீடு 100 ஐ தாண்டுமானால், புறப்பாட நடவடிக்கைகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News