Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தைப்பிங் சிறைச்சாலையில் கைகலப்பு: தடுப்புக் கைதி மரணம், விசாரணை தேவை

Share:

தைப்பிங், பிப்.3-

தைப்பிங் சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் ஏற்பட்ட கைகலப்பில் ஒரு கைதி கடுமையாகத் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் ஒரு சுயேட்சை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

சுயேட்சை குழுவினரால் மேற்கொள்ளப்படும் இந்த விசாரணையின் முடிவு, பொதுவில் அறிவிக்கப்பட வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் முகமட் எஸ்ரி அப்துல் வாஹாப் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கைகலப்பில் கிட்டத்தட்ட 100 கைதிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. காரணம், மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதிக்கும் 17 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாளில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

Related News

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்