Mar 29, 2026
Thisaigal NewsYouTube
மாடுகளைத் திருட முயன்ற இரு இராணுவ வீரர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மாடுகளைத் திருட முயன்ற இரு இராணுவ வீரர்கள் கைது

Share:

ஜாசின், மே.25-

ஜாசினில் உள்ள சிம்பாங் பெக்கோவில், இரண்டாவது முறையாக மாடுகளைத் திருட முயன்றதாகச் சந்தேகிக்கப்பட்ட இரண்டு இராணுவ வீரர்கள், நேற்று அதிகாலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதிகாலை 1 மணியளவில், 26 வயதுடைய அந்த இரு சந்தேக நபர்களும் ஒரு மாட்டுப் பண்ணையில் திருட முயன்றபோது, பண்ணை உரிமையாளரின் நண்பரால் கண்டுபிடிக்கப்பட்டனர் என ஜாசின் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ருஸ்லி மாட் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் தப்பி ஓட முயன்றபோது, அவர்களின் கார் ஆற்றுத் தடுப்பில் மோதியது, பின்னர் அவர்கள் ஜாசின் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் சரணடைந்தனர். விசாரணையில், இரு சந்தேக நபர்களும் ஏற்கனவே அதே பகுதியில் ஒரு மாட்டைத் திருடியதாக ஒப்புக் கொண்டனர்.

Related News