Dec 5, 2025
Thisaigal NewsYouTube
இணையப் பாதுகாப்புச் சட்டம் 2024: இனி ஏஐ உருவாக்கிய உள்ளடக்கத்திற்கு 'ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது' முத்திரை கட்டாயம்!
தற்போதைய செய்திகள்

இணையப் பாதுகாப்புச் சட்டம் 2024: இனி ஏஐ உருவாக்கிய உள்ளடக்கத்திற்கு 'ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது' முத்திரை கட்டாயம்!

Share:

கோலாலம்பூர், ஜூலை.13-

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கு "ஏஐ- ஆல் உருவாக்கப்பட்டது" என்று கட்டாயமாக முத்திரைக் குத்துவதை, இந்த ஆண்டு இறுதியில் அமலுக்கு வரவுள்ள இணையப் பாதுகாப்புச் சட்டம் 2024 இன் கீழ் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ஏஐ தவறாகப் பயன்படுத்துவது, குறிப்பாக சமூக ஊடகங்களில் மோசடி, அவதூறு பரப்புதல், அடையாளம் திருடுதல் போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு இது முக்கியம் என தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

சில சமூக ஊடகத் தளங்கள் ஏற்கனவே தானாகவே ஏஐ உள்ளடக்கத்திற்கு லேபலிங் செய்யத் தொடங்கியுள்ளன. மேலும் இந்த முயற்சி ஆசியான் நாடுகளிடையே விரிவுபடுத்தப்படலாம். ஏஐ உருவாக்கிய போலி வீடியோக்களும் படங்களும் பரவுவது குறித்த கவலைகள் உள்ள நிலையில், உலக அளவில் இன்னும் திருப்திகரமான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் இல்லை என்றும், ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலகத் தொலைத் தொடர்புச் சங்கம் போன்ற அமைப்புகளால் இது குறித்து தீவிர விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்