கோலாலம்பூர்,ஜன.18
இவ்வாரம் சனிக்கிழமை வரை பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் கன மழை பெய்யக் கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia கணித்துள்ளது.
பகாங் மாநிலத்தின் குவாந்தான், பெக்கான், ரொம்பின், ஆகிய வட்டாரங்களிலும்,
ஜோகூர் மாநிலஹ்தில் குளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு ஆகிய வட்டாரங்களிலும்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை வரை சரவாக்கின் கூச்சிங், செரியான், சமராஹான். ஶ்ரீ அமான், பெத்தோங், சரிக்கேய், சீபு, முக்கா ஆகிய வட்டாரங்களில் தொடர் மழை பெய்யும் எனவும் MetMalaysia கூறியுள்ளது.








