Dec 2, 2025
Thisaigal NewsYouTube
20 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் தங்க நகைகளுடன் ஓட்டம்
தற்போதைய செய்திகள்

20 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் தங்க நகைகளுடன் ஓட்டம்

Share:

சுங்கை பட்டாணி, நவம்பர்.13-

வாடிக்கையாளரைப் போல் பாவனை செய்து நகைக்கடைக்குள் நுழைந்த ஆடவர் ஒருவர் சுமார் 20 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்பைக் கொண்ட தங்க நகைகளுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் சுங்கை பட்டாணி, திக்காம் பத்துவில் உள்ள ஒரு நகைக்கடையில் நிகழ்ந்தது.

சம்பவம் நிகழும் போது நகைக்கடையில் ஐந்து வாடிக்கையாளர்கள் இருந்தனர். கடை பணியாளர்கள் அனைவரும் வாடிக்கையாளர்களைக் கவனிப்பதில் தீவிரமாக இருந்த போது, அந்த ஆடவர் இந்த கைங்கரியத்தைப் புரிந்துள்ளார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத நகைக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.

நகைகளை வாங்குவது போல் பாவனை செய்து, அவற்றைக் கையில் எடுத்து அழகுப் பார்த்துக் கொண்டு இருந்த நபர், அடுத்த நிமிடமே மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓட்டம் எடுப்பார் என்று பணியாளர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் 40.98 கிராம் எடை கொண்ட கைச்சங்கிலி பறி போனதாக அந்த நகைக்கடை உரிமையாளர் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்