Jul 18, 2026
Thisaigal NewsYouTube
பேராக் தெங்கா கொலைச் சம்பவம்: தப்பியோடிய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

பேராக் தெங்கா கொலைச் சம்பவம்: தப்பியோடிய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

Share:

பேராக், ஜாலான் டிரான்ஸ் பேராக் என்ற பகுதியில் ஏற்பட்ட மோதலில் 29 வயது இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தப்பியோடிய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இன்று அதிகாலை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 30 வயது முகமது ஃபரிசல் ஃபஸ்லி என்பவர் பாதிக்கப்பட்ட இளைஞரைக் குத்தியதாக நம்பப்படுவதாகப் பேராக் தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபிசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் டபிள்யூஜிஎக்ஸ் 3707 என்ற பதிவு எண்கொண்ட கருப்பு நிற புரோட்டோன் வீரா காரில் தப்பியோடியுள்ளார். இவரைக் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related News