Jun 10, 2026
Thisaigal NewsYouTube
பேராக் தெங்கா கொலைச் சம்பவம்: தப்பியோடிய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

பேராக் தெங்கா கொலைச் சம்பவம்: தப்பியோடிய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

Share:

பேராக், ஜாலான் டிரான்ஸ் பேராக் என்ற பகுதியில் ஏற்பட்ட மோதலில் 29 வயது இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தப்பியோடிய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இன்று அதிகாலை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 30 வயது முகமது ஃபரிசல் ஃபஸ்லி என்பவர் பாதிக்கப்பட்ட இளைஞரைக் குத்தியதாக நம்பப்படுவதாகப் பேராக் தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபிசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் டபிள்யூஜிஎக்ஸ் 3707 என்ற பதிவு எண்கொண்ட கருப்பு நிற புரோட்டோன் வீரா காரில் தப்பியோடியுள்ளார். இவரைக் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related News

வெளிநாட்டவர் கடைகள், விசா முறைகேடு: குடிநுழைவுத்துறை அதிரடி சோதனையில் 13 பேர் கைது

வெளிநாட்டவர் கடைகள், விசா முறைகேடு: குடிநுழைவுத்துறை அதிரடி சோதனையில் 13 பேர் கைது

குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த 32 சீனப் பிரஜைகளுக்கு RM322,000 ஆயிரம் அபராதம்

குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த 32 சீனப் பிரஜைகளுக்கு RM322,000 ஆயிரம் அபராதம்

நெகிரி செம்பிலான் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி: அம்னோ துணைத் தலைவர் மீது ஜசெக இளைஞர் பிரிவு குற்றச்சாட்டு

நெகிரி செம்பிலான் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி: அம்னோ துணைத் தலைவர் மீது ஜசெக இளைஞர் பிரிவு குற்றச்சாட்டு

ஒராங் அஸ்லி தலைவர் மற்றும் மலையேற்ற வீரரை ஏளனம் செய்த டிக்டாக் பயனர் மன்னிப்பு கோரினார்

ஒராங் அஸ்லி தலைவர் மற்றும் மலையேற்ற வீரரை ஏளனம் செய்த டிக்டாக் பயனர் மன்னிப்பு கோரினார்

பக்காத்தான் - பெர்சத்து கூட்டணிக்கு வாய்ப்பில்லை: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

பக்காத்தான் - பெர்சத்து கூட்டணிக்கு வாய்ப்பில்லை: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

செத்தியா ஆலாம்: பெண் தொழிலாளரைச் சில்மிஷம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்

செத்தியா ஆலாம்: பெண் தொழிலாளரைச் சில்மிஷம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்