ஜோர்ஜ்டவுடன்,ஜன.18
கடந்த நவம்பரில், யுனிவெர்சிட்டி சைன்ஸ் மலேசியா, புக்கிட் கம்பீர் நுழைவாயிலில் மூன்று மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்துக்கு இலக்காக்கிய வயது முதிர்ந்த வாகனமோட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவர் மீது சுமத்தப்பட்டக் குற்றத்தை மறுத்தார்.
போலீஸ் குமாஸ்தாவான 76 வயது தான் லியூக் லெ, மஜிஸ்ட்ரெட் சித்தி நுருல் சுஹைலா பஹாரின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குறங்களை அவர் மறுத்தார்.
ஆபத்தான முறையிலும், வேக வரம்பை மீறியும் வாகனத்தைச் செலுத்தியதில், மோட்டார் சைக்கிளோட்டிகளான 23 வயது அஃபிக் ரொசானி, 40 வயது நோர் எஸ்ரி அஹ்மாட், 15 வயது இர்ஃபான் ஹக்கிம் நோர் எஸ்ரி, 22 வயது ஷாமில் சுல்கர்நாயின், 22 வயது க்ரிஸ்தினா அப்துல்லா ஆகியோரை அந்தக் முதியவர் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி மதியம் 2.15 மணி அளவில் மோதியதாகக் குய்ற்றச்சாட்டபட்டது.
இதன் தொடர்பில் மஜிஸ்திரேட் சித்தி நுருல் சுகைலா 15 ஆயிரம் வெள்ளி ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், இவ்வாண்டு மார்ச் 8 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதாகவும் சித்தி குறிப்பிட்டார்.








