May 22, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகளை சித்ரவதை செய்து கொலை புரிந்ததாக மாது மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகளை சித்ரவதை செய்து கொலை புரிந்ததாக மாது மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போ, ஜூன் 21-

கடந்த வாரம், தனது வளர்ப்பு மகளை சித்ரவதை செய்து கொலை புரிந்ததாக மாது ஒருவர் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

28 வயது வான் பாத்திமா ஸஹ்ரா வான் அப்துல்லா என்ற அந்த மாது மாஜிஸ்திரேட் S புனிதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவிருப்பதால் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அம்மாதுவிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் மரணத்தண்டனை அல்லது குறைந்த பட்சம் 30 முதல் 40 ஆண்டுகள் வரையில் சிறை மற்றும் 12 பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் ஈப்போ, சிலிபின், தாமான் மால்காப், ஜாலான் கிளெடாங் ராயா 23 -வில் உள்ள ஒரு வீட்டில் 5 வயது இமான் அடேலியா யூசுல்லா என்ற அச்சிறுமியை சித்ரவதை செய்து கொலை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News