அடுத்த ஆண்டு உட்பட வெளிநாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதிக்கான ஒதுக்கீட்டை முடக்கும் முடிவு இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை எந்த புதிய முடிவும் எடுக்கவில்லை என்றும் மனிதவள அமைச்சர் வி சிவக்குமார் தெரிவித்தார்.
12வது மலேசியத் திட்டத்தின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு வரை வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனைத் தாண்டக்கூடாது, ஆனால் அண்மைய எண்ணிக்கை அந்தத் திட்டத்தைக் கடந்துள்ளது என அவர் சொன்னார்.
அடுத்த ஆண்டுக்கான வெளிநாட்டுத் தொழிலாளர் இறக்குமதி குறித்து பல்வேறு கோணங்களில் சிந்தக்க வேண்டி இருப்பதாகவும் தேவையின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் சொன்னார்.








