Jul 29, 2026
Thisaigal NewsYouTube
5 கோடி வெள்ளி கடன் வசதிகளை Bank Rakyat வழங்குகிறது
தற்போதைய செய்திகள்

5 கோடி வெள்ளி கடன் வசதிகளை Bank Rakyat வழங்குகிறது

Share:

கோலாலம்பூர், ஜன - 4,

தொழில் முனைவர்களுக்கும், மைக்ரோ குறு தொழில்துறையினருக்கும் கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டிலும் 5 கோடி வெள்ளி கடன் வசதியை பேங்க் ராக்யாட் வங்கி ஏற்படுத்தியுள்ளதாக தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

மைக்ரோ கடன் திட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சலுகையானது,
PMKS எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினக்கு பேங்க் ராக்யாட்தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆதரவாகும் என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

பேங்க் ராக்யாட்டின் இந்த மைக்ரோ கடன் வசதியானது, மடானி பொருளாதார முன் முயற்சியின் மூலம் நாட்டின் பொருளாதார உருமாற்றத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை அனைத்துலக மயமாக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளது என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

இன்று வியாழக்கிழமை கோலாலம்பூரில் உள்ள பேங்க் ராக்யாட் தலைமையகத்திற்கு வருகை புரிந்த டத்தோ ரமணன், அந்த முன்னணி வங்கியின் தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் தலைவர் ஆகியோருடன் நடத்திய சிறப்பு சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் மைக்ரோ தொழில்துறையை சார்ந்த 1,856 பேருக்கு 5 கோடி வெள்ளிக்கும் அதிகமான தொகையை பேங்க் ராக்யாட் கடனாக வழங்கியுள்ளது. இதில் பூமிபுத்ரா தொழில்முனைவர்களுக்கு 4 கோடியே 35 வெள்ளியும், சீனர்களுக்கு 54 லட்சம் வெள்ளியும், இந்தியர்களுக்கு 10 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளியையும் பேங்க் ராக்யாட் ஒதுக்கியதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்