Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அணைக்கட்டில் உள்ள நீர் மட்டம் இன்னும் 40 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும்
தற்போதைய செய்திகள்

அணைக்கட்டில் உள்ள நீர் மட்டம் இன்னும் 40 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும்

Share:

தற்போது நிலவி வரும் கடும் வெப்ப நிலையினாலும், மழையின்மை காரணத்தினாலும், பினாங்கு, ஆயர் ஹீதாம் அணைக்கட்டில் உள்ள நீர் மட்டம் குறைந்துக்கொண்டே வருவதாகவும், அதில் உள்ள நீர் இன்னும் 40 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்றும் மாநில உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக் குழுத் தலைவர் ஜைரில் கிர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பத்தின் காரணமாக நீர் நிலைகளில் வறட்சி சூழல் ஏற்பட்டுவரும் வேளையில், போதிய மழை பெய்யாவிட்டால், வரும் ஜூன் மாதத்திற்குள் அந்த அணைக்கட்டில் உள்ள நீர் வற்றிவிடும் என்று Zairil Khir குறிப்பிட்டார்.


இதன் தொடர்பில், நடப்பு நிலை மிக அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதே வேளையில், எதிர்காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க, பொது மக்கள் அதனை சேமிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்