Mar 23, 2026
Thisaigal NewsYouTube
பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்து 21 லட்சம் ரிங்கிட் கோரியது: இரு முக்கிய நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்து 21 லட்சம் ரிங்கிட் கோரியது: இரு முக்கிய நபர்கள் கைது

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.27-

வங்கி ஒன்றுக்குச் சொந்தமான அறவாரியத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி ஒருவரையும், அரசு சாரா இயக்கம் ஒன்றின் தலைவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

இருவரும் கூட்டாகச் சேர்ந்து, பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்து 21 லட்சம் ரிங்கிட்டைக் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அந்த இரு நபர்களும், இன்று காலையில் புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டது.

30 மற்றும் 50 வயதுடைய அவ்விருவரையும் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்ட அவ்விரு நபர்களும் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு