Jan 13, 2026
Thisaigal NewsYouTube
உள்துறை அமைச்சருக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொள்ள லிபெர்டி அமைப்பு முடிவு
தற்போதைய செய்திகள்

உள்துறை அமைச்சருக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொள்ள லிபெர்டி அமைப்பு முடிவு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.13-

17 வயது பையனின் மைக்காட் விண்ணப்பத்தைத் தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் ஏற்றுக் கொண்டதையடுத்து, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்கு எதிராகத் தொடரவிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கைவிடுவதாக லிபெர்டி வழக்கறிஞர்கள் அமைப்பின் ஆலோசகர் என். சுரேந்திரன் இன்று அறிவித்துள்ளார்.

அந்தப் பையனை மலேசியக் குடிமகனாக அங்கீகரித்து, அவருக்கு 30 நாட்களுக்குள் மைகாட் வழங்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

நீதிமன்ற உத்தரவு இருந்த போதிலும், ஆரம்பத்தில் ஜேபிஎன் அதிகாரிகள் மைகாட் வழங்க மறுத்து, 24 வகையான தேவையற்ற விண்ணப்பப் படிவங்களைச் பையனிடம் வழங்கியதாக சுரேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். இது "அதிகாரத்துவ பைத்தியக்காரத்தனம்" என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

அந்தப் பையனின் விண்ணப்பத்தை ஏற்க ஜேபிஎன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தால், உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர்கள் எச்சரித்திருந்தனர்.

இன்று காலை அந்தப் பையன், புத்ராஜெயாவில் உள்ள ஜேபிஎன் தலைமையகத்திற்குச் சென்ற போது, அதிகாரிகள் அவரது மைகாட் விண்ணப்பத்தை முறைப்படி ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து, அமைச்சருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதில்லை என்று சுரேந்திரன் உறுதிப்படுத்தினார்.

17 வயதுடைய அந்த பையன், கடந்த மாதம் எஸ்பிஎம் தேர்வை எழுதி முடித்த ஒரு மாணவர் ஆவார். இவர் தனித்து வாழும் தனது தாயுடன் வசித்து வருகிறார். பையனின் அசல் பிறப்புச் சான்றிதழ் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாகக் கூறி, ஜேபிஎன், அவருக்கு மைகாட் வழங்க நீண்ட காலமாக மறுத்து வந்தது. எனினும், கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி உயர் நீதிமன்றம் அவரை மலேசியக் குடிமகனாக அங்கீகரித்து தீர்ப்பளித்தது.

Related News

ஏர் ஆசியா எக்ஸ், ஏர் ஆசியா என மறுபெயரிடப்படுகிறது

ஏர் ஆசியா எக்ஸ், ஏர் ஆசியா என மறுபெயரிடப்படுகிறது

19 வயது பெண்ணிடம் கொள்ளையடித்த பின்னர் பாலியல் பலாத்காரம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

19 வயது பெண்ணிடம் கொள்ளையடித்த பின்னர் பாலியல் பலாத்காரம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

மாணவர்களுக்கான நிதி உதவி எவ்வித கட்டண பிடிப்புமின்றி முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும்

மாணவர்களுக்கான நிதி உதவி எவ்வித கட்டண பிடிப்புமின்றி முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும்

முன்னாள் ஐஜிபி-க்கு எதிரான அவதூறு வழக்கு: அமைச்சர் ஹன்னா இயோ வெற்றி! – 2  லட்சத்து 50 ஆயிரம்  ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஐஜிபி-க்கு எதிரான அவதூறு வழக்கு: அமைச்சர் ஹன்னா இயோ வெற்றி! – 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கூலிமில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 16 வயது மாணவர் ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிமில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 16 வயது மாணவர் ஆற்றில் மூழ்கி மரணம்

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தோமஸுக்கு எதிரான நஜிப்பின் மேல் முறையீட்டு வழக்கு ​அப்பீல் நீதிமன்றத்தில் தள்ளுபடி: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலை நிறுத்தியது

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தோமஸுக்கு எதிரான நஜிப்பின் மேல் முறையீட்டு வழக்கு ​அப்பீல் நீதிமன்றத்தில் தள்ளுபடி: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலை நிறுத்தியது