மலேசியாவிற்கு வருகைப் புரியும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடம் அதிக கட்டணம் விதிப்பது நாட்டின் தோற்றத்தை வெகுவாக பாதிக்கச் செய்துவிடும் என்று உள்நாட்டு மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் சலாஹூடி அயோப் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர், புகீட் பிந்தாங்கில் முடித்திருத்தும் நிலையம் ஒன்றில், இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவருக்கு முடித்திருத்துவதற்கு 120 வெள்ளி கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து கருத்துரைக்கையில், அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் இச்சம்பவம் குறித்து, தமது அமைச்சின் அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்வர் என்று சலாஹூடி அயோப் உறுதியளித்தார்.
அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணி தெரிவித்துள்ள புகார் அடிப்படையில், விசாரணை செய்யப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், முடித்திருத்துவதற்கு 50 வெள்ளிக்கு மேல் கட்டணம் விதிக்கப்படுவது ஏற்புடையது அல்ல என்று தெளிவுப்படுத்தினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


