மலேசியாவிற்கு வருகைப் புரியும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடம் அதிக கட்டணம் விதிப்பது நாட்டின் தோற்றத்தை வெகுவாக பாதிக்கச் செய்துவிடும் என்று உள்நாட்டு மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் சலாஹூடி அயோப் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர், புகீட் பிந்தாங்கில் முடித்திருத்தும் நிலையம் ஒன்றில், இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவருக்கு முடித்திருத்துவதற்கு 120 வெள்ளி கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து கருத்துரைக்கையில், அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் இச்சம்பவம் குறித்து, தமது அமைச்சின் அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்வர் என்று சலாஹூடி அயோப் உறுதியளித்தார்.
அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணி தெரிவித்துள்ள புகார் அடிப்படையில், விசாரணை செய்யப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், முடித்திருத்துவதற்கு 50 வெள்ளிக்கு மேல் கட்டணம் விதிக்கப்படுவது ஏற்புடையது அல்ல என்று தெளிவுப்படுத்தினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


