Jun 15, 2026
Thisaigal NewsYouTube
முடித்திருத்துவதற்கு 120 வெள்ளி கட்டணம் விதிப்பதா?
தற்போதைய செய்திகள்

முடித்திருத்துவதற்கு 120 வெள்ளி கட்டணம் விதிப்பதா?

Share:

மலேசியாவிற்கு வருகைப் புரியும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடம் அதிக கட்டணம் விதிப்பது நாட்டின் தோற்றத்தை வெகுவாக பாதிக்கச் செய்துவிடும் என்று உள்நாட்டு மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் சலாஹூடி அயோப் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், புகீட் பிந்தாங்கில் முடித்திருத்தும் நிலையம் ஒன்றில், இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவருக்கு முடித்திருத்துவதற்கு 120 வெள்ளி கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து கருத்துரைக்கையில், அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் இச்சம்பவம் குறித்து, தமது அமைச்சின் அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்வர் என்று சலாஹூடி அயோப் உறுதியளித்தார்.

அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணி தெரிவித்துள்ள புகார் அடிப்படையில், விசாரணை செய்யப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், முடித்திருத்துவதற்கு 50 வெள்ளிக்கு மேல் கட்டணம் விதிக்கப்படுவது ஏற்புடையது அல்ல என்று தெளிவுப்படுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்