மலேசியாவிற்கு வருகைப் புரியும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடம் அதிக கட்டணம் விதிப்பது நாட்டின் தோற்றத்தை வெகுவாக பாதிக்கச் செய்துவிடும் என்று உள்நாட்டு மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் சலாஹூடி அயோப் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர், புகீட் பிந்தாங்கில் முடித்திருத்தும் நிலையம் ஒன்றில், இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவருக்கு முடித்திருத்துவதற்கு 120 வெள்ளி கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து கருத்துரைக்கையில், அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் இச்சம்பவம் குறித்து, தமது அமைச்சின் அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்வர் என்று சலாஹூடி அயோப் உறுதியளித்தார்.
அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணி தெரிவித்துள்ள புகார் அடிப்படையில், விசாரணை செய்யப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், முடித்திருத்துவதற்கு 50 வெள்ளிக்கு மேல் கட்டணம் விதிக்கப்படுவது ஏற்புடையது அல்ல என்று தெளிவுப்படுத்தினார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


