மக்களுக்கு எப்போதும் போதுமான அரிசி விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு உள்நாட்டு அரிசி விநியோகப் பிரச்னையை தீர்ப்பதற்கு அரசாங்கம் கொண்டுள்ள பிரதான திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டார்.
உள்நாட்டு அரிசி உற்பத்தி கடந்த 2021 ஆம் ஆண்டு 16 லட்சத்து 80 ஆயிரம் டன்னாக இருந்தது. அது கடந்த ஆண்டு 15 லட்சத்து 70 ஆயிரம் டன்னாக சரிவு கண்டுள்ளது.
இந்நிலையில் மக்களுக்கு போதுமான அரிசி விநியோகம் எல்லா காலக்கட்டங்களிலும் இருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எத்தகைய திட்டத்தை கொண்டுள்ளது என்பதை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


