மக்களுக்கு எப்போதும் போதுமான அரிசி விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு உள்நாட்டு அரிசி விநியோகப் பிரச்னையை தீர்ப்பதற்கு அரசாங்கம் கொண்டுள்ள பிரதான திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டார்.
உள்நாட்டு அரிசி உற்பத்தி கடந்த 2021 ஆம் ஆண்டு 16 லட்சத்து 80 ஆயிரம் டன்னாக இருந்தது. அது கடந்த ஆண்டு 15 லட்சத்து 70 ஆயிரம் டன்னாக சரிவு கண்டுள்ளது.
இந்நிலையில் மக்களுக்கு போதுமான அரிசி விநியோகம் எல்லா காலக்கட்டங்களிலும் இருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எத்தகைய திட்டத்தை கொண்டுள்ளது என்பதை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


