கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி, காவல் துறை அதிகாரி ஒருவர் தமது பணியைச் செய்ய விடாமல் தடையாக இருந்த 25 வயது முஹமாட் டிசாஹிர் அப்துல்லா எனும் ஆடவருக்கு 2 ஆயிரத்து 800 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனையை மஜிஸ்த்ரெட் எம் கலைஅரசி விதித்தார்.
காவல் துறையில் சார்ஜன் பதவியைக் கொண்ட அதிகரி ஒருவர் சுங்கை பட்டாணி, கவாசான் பெர்க்கிலாங்ஙான் பாக்கார் அராங்ஙில் அதிகாலை 1.30 மணி அளவில் பணியுஇல் ஈடுபட்டிருந்த போது, அவருக்குத் தொந்தரவாக முஹமாட் டிசாஹிர் அப்துல்லா செயல்பட்டார் எனக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை அவர் ஒப்புக் கொண்டார்.
மேலும், அவர் போதைப் பொருட் உட்கொண்டிருந்தது சிறுநீர் சோதனையில் தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. போதைப் பொருள் விவகாரம் குறித்து எதிர்வரும் பிப்பரவரி 14 ஆம் தேதி அன்று அவ்வழக்கு மீன்டும் செவிமெடுப்புக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.








