விஷப்பாம்பு தீண்டியிருக்கலாம் என்று நம்பப்படும் ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த அந்த தொழிலாளி குறித்து பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து சபா, கெனிங்காவ், கிராமம் புனாங் உலு சூக் என்ற இடத்தில் 36 வயதுடைய அந்த தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டதாக கேனிங்கவ் மாவட்ட போலீஸ் தலைவர் ரஃபிதா காசிம் அல்ல தெரிவித்தார். ரப்பர் பால் மர நிரையில் அந்த தொழிலாளி கிடந்ததாகவும், அருகில் புல்வெட்டும் இயந்திரம் ஒன்று காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த தொழிலாளியின் உடலில் விஷ பாம்பு தீண்டியதற்கான அடையாளங்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


