விஷப்பாம்பு தீண்டியிருக்கலாம் என்று நம்பப்படும் ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த அந்த தொழிலாளி குறித்து பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து சபா, கெனிங்காவ், கிராமம் புனாங் உலு சூக் என்ற இடத்தில் 36 வயதுடைய அந்த தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டதாக கேனிங்கவ் மாவட்ட போலீஸ் தலைவர் ரஃபிதா காசிம் அல்ல தெரிவித்தார். ரப்பர் பால் மர நிரையில் அந்த தொழிலாளி கிடந்ததாகவும், அருகில் புல்வெட்டும் இயந்திரம் ஒன்று காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த தொழிலாளியின் உடலில் விஷ பாம்பு தீண்டியதற்கான அடையாளங்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


