May 26, 2026
Thisaigal NewsYouTube
எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை
தற்போதைய செய்திகள்

எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை

Share:

கோலாலம்பூர், நவ.13-


கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, ஓ.யு.ஜி. கார்டனில் உள்ள ஒரு வீட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு, ஐஸ் பெட்டிலியிலிருந்து மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூதாட்டி காணாதது குறித்து தாங்கள் எந்தவொரு போலீஸ் புகாரையும் பெறவில்லை என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி இசா தெரிவித்தார்.

தனது தாயாரை கொன்று அவரின் உடலை வீட்டின் ஐஸ் பெட்டியில் வைத்திருந்த அந்த மூதாட்டியின் 53 வயது மகன் கைது செய்யப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட மூதாட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக காணாதது குறித்து அவரின் நெருங்கிய உறவினர்களிடமிருந்து எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை என்று தரவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அந்த மூதாட்டியின் மகன். இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு , வரும் நபம்வர் 19 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையை போலீசார் பெற்றுள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நபர், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related News

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல்  வீணாகிவிடும்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல் வீணாகிவிடும்

கோலாலம்பூரில் பலத்த மழை: மரங்கள் விழுந்து கார்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

கோலாலம்பூரில் பலத்த மழை: மரங்கள் விழுந்து கார்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு