Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் தாதியைத் தாக்கிய ஆடவர் கைது

Share:

கோலாலம்பூர், மார்ச்.05-

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு முன்புறம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த தாதி ஒருவரைத் தாக்கியதாக நம்பப்படும் ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 10.38 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் கடந்த மார்ச் முதல் தேதி இரவு 10 மணியளவில் அந்த சந்தேகப் பேர்வழியை போலீசார் கைது செய்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏஎஸ்பி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

பிடிபட்ட நபர், மனோரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து ஒரு கத்தியை போலீசார் மீட்டுள்ளனர். எந்தவொரு அடையாளப் பத்திரமும் இல்லாததால் அவரைப் பற்றிய விவரங்களை அறியமுடியவில்லை. சிகிச்சைக்காக அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சுலிஸ்மி அஃபெண்டி குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நபரின் தாக்குதலுக்கு ஆளான தாதிக்கு தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு