Jul 16, 2026
Thisaigal NewsYouTube
செத்தாபாவில் மடிக்கணினியை லாவகமாகத் திருடிச் செல்லும் நபர் – போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

செத்தாபாவில் மடிக்கணினியை லாவகமாகத் திருடிச் செல்லும் நபர் – போலீசார் விசாரணை

Share:

கோலாலம்பூர், ஜூன்.14-

கோலாலம்பூரின் செத்தாபா செண்ட்ரல் பகுதியில் மடிக்கணினி பை ஒன்றை நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் 11-ஆம் தேதி புகார் பெறப்பட்டதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் அன்னாஸ் சுலைமான் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட பொருட்கள், பணம் மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் இருந்த அப்பையை நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபரை அடையாளம் காணவும், கைது செய்யவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

ஹாங்காங்கில் 3 கிலோ கஞ்சா கடத்தியதாக மலேசிய இளைஞர் கைது

ஹாங்காங்கில் 3 கிலோ கஞ்சா கடத்தியதாக மலேசிய இளைஞர் கைது