May 26, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் ஐந்து குடிநுழைவு அதிகாரிகள் காயம்
தற்போதைய செய்திகள்

விபத்தில் ஐந்து குடிநுழைவு அதிகாரிகள் காயம்

Share:

ஜோகூர்பாரு, டிச.11-


ஜோகூர்பாரு, பெர்மாஸ் ஜெயாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மலேசிய குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகளில் ஐவர் காயமுற்றனர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் நிகழ்ந்தது. ஜோகூர்பாருவில் தங்கள் பணியை முடித்து விட்டு, 6 குடிநுழைவு அதிகாரிகளும் எம்பிவி வாகனத்தில் கோலாலம்பூருக்கு திரும்பிக்கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

லோரி ஓட்டுநர் ஒருவர், வேகக்கட்டுப்பாட்டை இழந்ததைத்தொடர்ந்து அந்த கனரக வாகனம் மற்ற வாகனங்களை மோதித்தள்ளியது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி ரவுப் செலாமாட் குறிப்பிட்டார்.

இதில் லோரி ஓட்டுநர் உட்பட இதர நான்கு வாகனங்களில் இருந்தவர்கள் காயமடையவில்லை. எம்பிவி வாகனத்தில் காயமுற்ற ஐந்து குடிநுழைவு அதிகாரிகள் ஜோகூர்பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு