Jul 16, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் துரத்தலின் போது மேம்பாலத்திலிருந்து குதித்த சந்தேக நபர் பலி
தற்போதைய செய்திகள்

போலீஸ் துரத்தலின் போது மேம்பாலத்திலிருந்து குதித்த சந்தேக நபர் பலி

Share:

கோலாலம்பூர், ஜாலான் பந்தாய் டாலாம் பகுதியில் போலீஸ் வாகனங்கள் துரத்திய போது, மேம்பாலத்திலிருந்து கீழே குதித்த சந்தேக நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ரோந்து போலீசார், குற்றச் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் புரோட்டான் வீரா காரைத் துரத்திய போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசிடமிருந்து தப்பியோட முயன்ற அந்த கார், மற்றொரு காரின் மீதும் போலீஸ் வாகனத்தின் மீதும் மோதி நின்றது.

இதனைத் தொடர்ந்து, காரை ஓட்டி வந்த நபர் திடீரென மேம்பாலத்திலிருந்து கீழே குதித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மற்ற இரு பயணிகளில் ஒருவர் காயமடைந்த நிலையில், மற்றொருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

Related News

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

ஹாங்காங்கில் 3 கிலோ கஞ்சா கடத்தியதாக மலேசிய இளைஞர் கைது

ஹாங்காங்கில் 3 கிலோ கஞ்சா கடத்தியதாக மலேசிய இளைஞர் கைது