Mar 28, 2026
Thisaigal NewsYouTube
18 பேர் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

18 பேர் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டனர்

Share:

ஈப்போ, ஜூன்.11-

உலு பேராக், ஜெலி-கெரிக் வடக்கு மேற்கு சாலையின் 53 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமுற்றவர்களில் 18 பேர், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சோங் மாலிம், உப்சி கல்வியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த வேளையில் மற்றவர்கள் அனைவரும் கடுமையாகக் காயமுற்றனர்.

இன்று காலை 10 மணி வரை கிடைக்கப் பெற்றத் தகவலின்படி, 18 பேர் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 15 பேர், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பத்து பேர், தைப்பிங் மருத்துவமனையிலும், இருவர், ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையிலும், எஞ்சிய மூவர், கெடா, பாலிங் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அந்த 15 பேருக்கு கடும் காயங்கள் ஏற்பட்ட போதிலும் யாரும், தீவிர கண்காணிப்பு வார்டுகளில் அனுமதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு