Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் கொலை: 6 இந்தியப் பிரஜைகள் போலீஸ் ஜாமீனில்  விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

ஆடவர் கொலை: 6 இந்தியப் பிரஜைகள் போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு

Share:

ஷா ஆலாம், நவம்பர்.11-

கடந்த வியாழக்கிழமை பூச்சோங், பூசாட் பண்டார் பூச்சோங்கில் உள்ள கடை வீட்டின் படியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததாகச் சந்தேகிப்படும் மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தைக் கொண்டுள்ள ஓர் இந்தியப் பிரஜையின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த 6 இந்தியப் பிரஜைகள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொலையுண்ட நபருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த இந்த ஆறு நபர்களும் இதற்கு முன்பு முக்கிய சந்தேகப் பேர்வழியாக வகைப்படுத்தப்பட்டு இருந்தனர். அறுவரிடமும் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.

அறுவரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம், இந்த படுகொலை தொடர்பான விசாரணைக்கு வலு சேர்க்கும் வகையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பூச்சோங்கில் தங்கி, டெக்னிஷனாகச் சுயத் தொழில் நடத்தி வந்ததாக நம்பப்படும் 49 வயது இந்தியப் பிரஜை, கடை வீட்டின் படிகட்டில் இறந்து கிடந்தார்.

இந்தக் கொலைக்குக் காரணமான முக்கிய சந்தேகப் பேர்வழியை நோக்கி போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ஷாஸெலி காஹார் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு