Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆடவர் கொலை: 6 இந்தியப் பிரஜைகள் போலீஸ் ஜாமீனில்  விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

ஆடவர் கொலை: 6 இந்தியப் பிரஜைகள் போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு

Share:

ஷா ஆலாம், நவம்பர்.11-

கடந்த வியாழக்கிழமை பூச்சோங், பூசாட் பண்டார் பூச்சோங்கில் உள்ள கடை வீட்டின் படியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததாகச் சந்தேகிப்படும் மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தைக் கொண்டுள்ள ஓர் இந்தியப் பிரஜையின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த 6 இந்தியப் பிரஜைகள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொலையுண்ட நபருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த இந்த ஆறு நபர்களும் இதற்கு முன்பு முக்கிய சந்தேகப் பேர்வழியாக வகைப்படுத்தப்பட்டு இருந்தனர். அறுவரிடமும் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.

அறுவரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம், இந்த படுகொலை தொடர்பான விசாரணைக்கு வலு சேர்க்கும் வகையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பூச்சோங்கில் தங்கி, டெக்னிஷனாகச் சுயத் தொழில் நடத்தி வந்ததாக நம்பப்படும் 49 வயது இந்தியப் பிரஜை, கடை வீட்டின் படிகட்டில் இறந்து கிடந்தார்.

இந்தக் கொலைக்குக் காரணமான முக்கிய சந்தேகப் பேர்வழியை நோக்கி போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ஷாஸெலி காஹார் குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்