Mar 13, 2026
Thisaigal NewsYouTube
நான்கு சிறார்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிப்பு
தற்போதைய செய்திகள்

நான்கு சிறார்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிப்பு

Share:

பேரா, பசிர் சாலாக், கம்போங் காஜா அருகில் மத்திய பேரா அரசு நிர்வாக கட்டட வளாகத்தில் பாதுகாவலர் சாவடியில் பத்து மாத கைக்குழந்தை உட்பட நான்கு சிறார்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டனர். உடன்பிறப்புகள் என்று நம்பப்படும் அந்த நான்கு சிறார்களும் நேற்று காலை 10.50 மணியளவில் அந்த பாதுகாவலர் சாவடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

11 வயது சிறுவன், ஆறு வயது சிறுமி, 3 வயது சிறுவன் மற்றும் பத்து மாத ஆண் குழந்தை ஆகியோர் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தது குறித்து மாலை 5.39 மணியளவில் மாவட்ட ச​​மூக நல இலாகா மூலம் தெரியவந்துள்ளதாக ம​த்திய பேரா மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிதென்டன் ஹஃபெசுல் ஹெல்மி தெரிவித்தார்.

தொயோத்தா ரக காரில் வந்த மாது ஒருவர், அந்தப் பிள்ளைகளை அவ்விடத்தில் இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டதாக போ​லீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தாங்கள் ​தீவிர விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!