Dec 5, 2025
Thisaigal NewsYouTube
நான்கு சிறார்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிப்பு
தற்போதைய செய்திகள்

நான்கு சிறார்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிப்பு

Share:

பேரா, பசிர் சாலாக், கம்போங் காஜா அருகில் மத்திய பேரா அரசு நிர்வாக கட்டட வளாகத்தில் பாதுகாவலர் சாவடியில் பத்து மாத கைக்குழந்தை உட்பட நான்கு சிறார்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டனர். உடன்பிறப்புகள் என்று நம்பப்படும் அந்த நான்கு சிறார்களும் நேற்று காலை 10.50 மணியளவில் அந்த பாதுகாவலர் சாவடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

11 வயது சிறுவன், ஆறு வயது சிறுமி, 3 வயது சிறுவன் மற்றும் பத்து மாத ஆண் குழந்தை ஆகியோர் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தது குறித்து மாலை 5.39 மணியளவில் மாவட்ட ச​​மூக நல இலாகா மூலம் தெரியவந்துள்ளதாக ம​த்திய பேரா மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிதென்டன் ஹஃபெசுல் ஹெல்மி தெரிவித்தார்.

தொயோத்தா ரக காரில் வந்த மாது ஒருவர், அந்தப் பிள்ளைகளை அவ்விடத்தில் இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டதாக போ​லீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தாங்கள் ​தீவிர விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்