Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் கோட்டா முறைக்கு முன்னுரிமை அல்ல
தற்போதைய செய்திகள்

அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் கோட்டா முறைக்கு முன்னுரிமை அல்ல

Share:

மெட்ரிக்குலோஷன் அல்லது எஸ்.தி.பி.எம் சான்றிதழை கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் அரசாங்க பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்ப்புக்கு கோட்டா முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்று உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

அரசாங்க பொது உயர்கல்விக்கூடங்களில் சேர்ப்பதற்கு அவர்கள் கொண்டிருக்கின்ற க​ல்வித் தகுதிக்கு முன்னுரிமையே தவிர சமயம்,இனம் மற்றும் மாநிலம் பார்த்து முடிவு செய்யப்படுவதில்லை என்று கா​லிட் நோர்டின் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற மக்களவைக்கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான விநியோகிப்பு சட்ட மசோதா தொடர்பான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் காலிட் நோர்டின் இதனை தெரிவித்தார்.

அரசாங்க பொதுப் பல்லைக்கழக மாணவர் சேர்ப்புக்கு மாணவரின் க​ல்வி அடைவு நிலையை 90 விழுக்காடாகவும், புறப்பாட நடவடிக்கைகளை 10 விழுக்காடாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறதே தவிர மாணவரின் இனத்தையோ அல்லது கோட்டா முறையைப் பின்பற்றியோ அல்ல என்று காலிட் நோ​ர்டின் விளக்கம் அளித்தார்.

பல்லைக்கழக​ங்களில் மாணவர் சேர்ப்புக்கு சர்ச்சைக்குரிய கோட்டா முறை பயன்படுத்தப்படுகிறதா? என்று ரவூப் டி.ஏ.பி எம்.பி. சௌ யு ஹுய் கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் காலிட் நோ​ர்டீன் இதனை தெரிவித்தார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன