மெட்ரிக்குலோஷன் அல்லது எஸ்.தி.பி.எம் சான்றிதழை கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் அரசாங்க பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்ப்புக்கு கோட்டா முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்று உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
அரசாங்க பொது உயர்கல்விக்கூடங்களில் சேர்ப்பதற்கு அவர்கள் கொண்டிருக்கின்ற கல்வித் தகுதிக்கு முன்னுரிமையே தவிர சமயம்,இனம் மற்றும் மாநிலம் பார்த்து முடிவு செய்யப்படுவதில்லை என்று காலிட் நோர்டின் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற மக்களவைக்கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான விநியோகிப்பு சட்ட மசோதா தொடர்பான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் காலிட் நோர்டின் இதனை தெரிவித்தார்.
அரசாங்க பொதுப் பல்லைக்கழக மாணவர் சேர்ப்புக்கு மாணவரின் கல்வி அடைவு நிலையை 90 விழுக்காடாகவும், புறப்பாட நடவடிக்கைகளை 10 விழுக்காடாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறதே தவிர மாணவரின் இனத்தையோ அல்லது கோட்டா முறையைப் பின்பற்றியோ அல்ல என்று காலிட் நோர்டின் விளக்கம் அளித்தார்.
பல்லைக்கழகங்களில் மாணவர் சேர்ப்புக்கு சர்ச்சைக்குரிய கோட்டா முறை பயன்படுத்தப்படுகிறதா? என்று ரவூப் டி.ஏ.பி எம்.பி. சௌ யு ஹுய் கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் காலிட் நோர்டீன் இதனை தெரிவித்தார்.








