Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது : தொழிற்சாலைப் பணியாளர் மரணம்
தற்போதைய செய்திகள்

கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது : தொழிற்சாலைப் பணியாளர் மரணம்

Share:

குளுவாங், ஆகஸ்ட்.02-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி தடம் புரண்டதில் தொழிற்சாலைப் பணியாளர் ஒருவர் மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 8.20 மணியளவில் ஜோகூர், குளுவாங், ஜாலான் ஜோகூர் பாரு – ஆயர் ஹீத்தாம் சாலையின் 76 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

இதில் 32 வயது கமாருஸாமான் குசின் என்பவர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் நிக் முகமட் அஸ்மி ஹுசேன் தெரிவித்தார்.

Related News