போலியான ''டத்தோ தான் ஶ்ரீ' பட்டங்களை போலியான முறையில் விற்ற கும்பலை இம்மாதத் தொடக்கத்தில் மலேசிய லஞ்ச ஒழிப்பு கமிஷன் முறியடித்தது. அதனைத் தொடர்ந்து அவ்விவகாரத்தில் ஏமாறியவர்களை எம்ஏசிசி தேடி வருகிறது.
அரசு சாரா அமைப்பு ஒன்றில் முக்கியமானப் பொறுப்பில் இருக்கு ஆடவர் ஒருவர் பலரை இவ்விவகாரத்தில் ஏமாற்றி இருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறொ இருப்பதாக SINAR HARIAN செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஆடவரை எம்ஏசிசி அண்மையில் விசாரித்து இருந்தாலும், விசாரணைக்கு உதவும் வகையில் அந்த ஆடவரால் ஏமாற்றப்பட்டவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். எனவே, அவர்களும் முன்வர வேண்டும் என எம்ஏசிசி குறிப்பிட்டது.
இது வரையில், அந்த ஆடவரின் வலையில் 7 பேர் சிக்கியதாக நம்பப்படும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஐவர் எம்ஏசிசியிடம் சாடியம் அளித்துள்ளனர்.
அந்த ஆடவரால் எமாற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்களே முன்வந்து சாட்சியம் அளித்து விசாரணைக்கு உதவுமாறு எம்ஏசிசி கூறியது.








