May 4, 2026
Thisaigal NewsYouTube
நயிமா அப்துல் காலிட் தொடுத்த வழக்கு: நீதிமன்றத்தில் பதிலளிக்க அரசு தயார் என பிரதமர் உறுதி
தற்போதைய செய்திகள்

நயிமா அப்துல் காலிட் தொடுத்த வழக்கு: நீதிமன்றத்தில் பதிலளிக்க அரசு தயார் என பிரதமர் உறுதி

Share:

கூலிம், மார்ச்.08-

முன்னாள் நிதியமைச்சரின் மனைவி தோ புவான் நயிமா அப்துல் காலிட்டும் அவரது குடும்பத்தினரும் தொடுத்துள்ள வழக்கை சட்டப்படியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கடந்த காலத் தவறுகளால் ஏற்பட்ட இழப்புகளைத் தவிர்த்து, நாட்டின் வருவாயை மீட்டெடுக்க அரசு எடுக்கும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுச் சதிகளிலும் தேசத்திற்கு எதிரான முயற்சிகளில் இருந்தும் நாட்டைக் காக்க எவ்வித சமரசமும் இன்றி செயல்படப் போவதாகத் தெரிவித்த பிரதமர், மாநில மேம்பாட்டிற்காகப் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளையும் இக்கூட்டத்தில் அறிவித்தார்.

Related News