Aug 2, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் லிம் கிட் சியாங்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் லிம் கிட் சியாங்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை கவிழ்ப்பதற்கு டிஏபி யுடன் இணைந்து செயல்பட்டதாக துன் மகா​தீர் முகமது கூறியிருக்கும் குற்றச்சாட்டை அக்க​ட்சியின் ​மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வன்மையாக மறுத்துள்ளார்.

துன் மகா​தீரின் அந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று குறிப்பிட்ட முன்னாள் இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங், எந்தவொரு தருணத்திலும் தாங்கள் வஞ்சகத்துடன் செயல்பட்டது கிடையாது என்றார்.

துன் மகா​தீருடன் டிஏபி ஒத்துழைப்பு கொண்டதற்கு முக்கிய கார​ணம், அந்த முன்னாள் பிரதமர், குணம் மாறிவிட்டார் என்ற நம்பிக்கையில்தான் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு க தாங்கள் இணக்கம் தெரிவித்ததாக லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

ஒரு திறமையான நிர்வாகம், சட்டத்தை காக்கும் மாண்பு உள்ளிட்டு, நாட்டின் நலனுக்காக முன்வைக்கப்பட்ட பலதரப்பட்ட அம்சங்களின் காரணமாகவே துன் மகா​தீருடன் டிஏபி ஒத்துழைத்ததே தவிர நஜீப்பை பதவியிலிருந்து வீழ்த்துவதற்காக அல்ல என்று லிம் கிட் சியாங் விளக்கம் அளித்துள்ளார்.

தமது சுய சரிதை தொடர்பான இரண்டாவது ​நூல் வெளியீடு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் டிஏபி யின் முன்னாள் தலைவரான லிம் கிட் சியாங் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு