Jan 9, 2026
Thisaigal NewsYouTube
உணவகப் பணியாளரை தாக்கியதாக நளினி கோதண்டபாணி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

உணவகப் பணியாளரை தாக்கியதாக நளினி கோதண்டபாணி மீது குற்றச்சாட்டு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.08-

உணவகப் பெண் பணியாளர் ஒருவரைத் தாக்கியதாக தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் ஒருவர், பெட்டாலிங் ஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

41 வயது நளினி கோதண்டபாணி என்ற தகவல் தொழில்நுட்பப் பொறியாளர், கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கான், செர்டாங் ராயாவில் ஷெல் நிலையத்தில் உள்ள மெக்டோனல்ஸ் உணவகத்தில் அதன் பணியாளரான 46 வயது ராணி ஆறுமுகத்தைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேட் Amira Saroaty Zainal முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட நளினி கோதண்டபாணி, தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நளினி கோதண்டபாணி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

நளினிக்கு 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் சையிட் அஹ்மாட் கபீர் அப்துல் ரஹ்மான் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தார்.

எனினும் நளினிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், புற்றுநோய் மற்றும் இருதய கோளாற்றினால் அவதியுற்று வரும் தனது பெற்றோரைக் கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால் குறைந்த ஜாமீன் தொகையை விதிக்குமாறு அவரின் வழக்கறிஞர் டினேஷ் முதால் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் நளிளி 2 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

கைகலப்பில் ஈடுபட்ட அறுவருக்குத் தடுப்புக் காவல்

கைகலப்பில் ஈடுபட்ட அறுவருக்குத் தடுப்புக் காவல்

மாணவர்களுக்கு மீண்டும் யுபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள்: அதிரடி மறு ஆய்வில் இறங்கியது கல்வி அமைச்சு!

மாணவர்களுக்கு மீண்டும் யுபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள்: அதிரடி மறு ஆய்வில் இறங்கியது கல்வி அமைச்சு!

மூவருக்கு வெட்டுக்கத்தியால் பலத்த காயங்களை விளைவித்ததாக 3 சகோதரர்கள் உட்பட ஆறு பேர் மீது குற்றச்சாட்டு

மூவருக்கு வெட்டுக்கத்தியால் பலத்த காயங்களை விளைவித்ததாக 3 சகோதரர்கள் உட்பட ஆறு பேர் மீது குற்றச்சாட்டு

ஊழல் அதிகாரிகளைத் தட்டிக் கேட்க மக்களுக்கு உரிமை உண்டு! - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்

ஊழல் அதிகாரிகளைத் தட்டிக் கேட்க மக்களுக்கு உரிமை உண்டு! - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்

ஸாஹிட்டின் லஞ்ச ஊழல் வழக்கில் ஆதாரங்கள் எங்கே போயின? 47 குற்றச்சாட்டுகள் புதைக்கப்பட்டனவா? சட்டத்துறை அலுவலகத்தை நோக்கிப் பாய்ந்தார் ராம் கர்பால் சிங்

ஸாஹிட்டின் லஞ்ச ஊழல் வழக்கில் ஆதாரங்கள் எங்கே போயின? 47 குற்றச்சாட்டுகள் புதைக்கப்பட்டனவா? சட்டத்துறை அலுவலகத்தை நோக்கிப் பாய்ந்தார் ராம் கர்பால் சிங்

மலேசியப் பெண்களுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றி: வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்குத் தானாகவே குடியுரிமை - லிம் ஹுய் யிங் மகிழ்ச்சி

மலேசியப் பெண்களுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றி: வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்குத் தானாகவே குடியுரிமை - லிம் ஹுய் யிங் மகிழ்ச்சி