Aug 2, 2026
Thisaigal NewsYouTube
நடுவானில் விமானத்தில் ஆபாசப்படம் / 1 மணி நேரம் நிற்காமல் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி
தற்போதைய செய்திகள்

நடுவானில் விமானத்தில் ஆபாசப்படம் / 1 மணி நேரம் நிற்காமல் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி

Share:

டோக்கியோ,அக்டோபர் 08-

ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான், டோக்கியோ சென்ற Qantas விமானத்தில் நிறுத்தவும், அகற்றவும் முடியாதபடி ஆபாச படம் ஓடியதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து ஜப்பானில் உள்ள Haneda-விற்கு கடந்த வாரம் Qantas Airlines, QF 59 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. சற்று தாமதமாக சென்ற அந்த விமானம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்தபோது பயணிகள் முன்னால் உள்ள திரையில் திடீரென ஆபாசப்படம் ஓடத் தொடங்கியுள்ளது.

பொதுவாக பயணிகள் முன்னால் உள்ள திரை, பயணிகள் வசதிக்கேற்ப படங்களை தேர்வு செய்து பார்க்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இதில் அனைத்து திரைகளிலும் ஆபாச படம் ஓடியுள்ளது. சில பயணிகள் அதை நிறுத்த முயற்சித்தபோது தொடுதிரை சரியாக செயல்படவில்லை.

இதனால் விமானம் ஜப்பான் சென்று இறங்கும் வரை சுமார் 1 மணி நேரம் ஆபாசப்படத்தை பார்க்க வேண்டிய சூழல் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகே இந்த கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.

Entertaiment System Server-ரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக விமான ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு ஆஸ்திரேலியாவின் அதிகாரத்துவ விமான நிறுவமான Qantas Airlines பயணிகளிடம் இன்று பகிரங்க மன்னிப்புக் கோரியது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு