Mar 11, 2026
Thisaigal NewsYouTube
நாடு முழுவதும் விசாக தின கொண்டாட்டம்
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் விசாக தின கொண்டாட்டம்

Share:

"துன்பத்திற்கு மூலக்காரணம் ஆசைதான்” எனும் மாபெரும் தத்துவத்தை உலகிற்குப் போதித்த சித்தார்த்த கெளதம புத்தரின் பிறந்த தினமான விசாக தினம், இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு உட்பட பல மாநிலங்களில் உள்ள புத்த விகாரங்களில் காலையில் சிறப்பு பூசைகள் மற்றும் வழிபாடுகளுடன் விசாக தினம் வரவேற்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான பெளத்த சமயத்தைச் சேர்ந்தவர்களும், புத்த பிக்குகளும், சன்னியாசிகளும், பொது மக்களும் இத்தரணியில் தோன்றிய அந்த மகா ஞானியின் உன்னத விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

கோலாலம்பூரில் பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் பெர்ஹாலாவில் உள்ள மஹா விகாரத்திலும், பழைய கிள்ளான் சாலையில் உள்ள புத்தர் ஆலயத்திலும், செந்தூல், ஶ்ரீ லங்கா புத்த விகாரத்திலும் விசாக தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புத்தரின் சிலைக்கு முன் விளக்குகளை ஏந்தி, மலர்களைத் தூவி மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆங்காங்கு அமர்ந்திருந்த புத்த பிக்குகள் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் புனித நீர் தெளித்து, கைகளில் ஆசீர்வாதிக்கப்பட்ட கயிற்றை கட்டி, அருளாசி வழங்கினர். ஈப்போ தம்புனில் உள்ள புத்த விகாரத்திலும் விசாக தினம் களைக்கட்டியது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு